Header Ads



ஈரான் அணுவாயுத உற்பத்தியை நிறுத்தாவிட்டால் தாக்குவோம் - இஸ்ரேல் எச்சரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஈரான் நாடு அணு ஆயுதங்களை அதிகம் உற்பத்தி செய்து வருவதாகவும், இதை உலக நாடுகள் தடுத்து நிறுத்தாவிட்டால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்க்குதல் நடத்தும் என்று கூறி வருகிறது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:- 

ஈரான் வரம்பு மீறி அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது. எகிப்து, சிரியா பிரச்சினைகளால் ஈரான் பிரச்சினையை அலட்சியாமக விட்டுவிட வேண்டாம் என உலக நாடுகளை எச்சரிக்கிறேன். ஈரான் அணு ஆயுத நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகிறது. மேலும் கண்டம் விட்டு சென்று தாக்கும் ஏவுகணைகளையும் அது தயாரித்து வருகிறது. 

அவர்கள் தொடர்ந்து அணுகுண்டுகளை தயாரித்து வருகிறார்கள். அது தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஈரான் தாக்கக்கூடும் என்று பயமிருப்பதால், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதரத்தடைகளை உலக நாடுகள் அதிகப்படுத்தவும், ஆதரிக்கவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

3 comments:

  1. Nothing will happen, just you shout go to hell.

    ReplyDelete
  2. You can not do anything. We always support Iran

    ReplyDelete
  3. attacking IRAN is attacking Mualim Ummah

    ReplyDelete

Powered by Blogger.