Header Ads



ஐவருக்கு மரணதண்டனை - மொனராகலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

(Tm) கொலைக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிபில மெதகம டீ.எம்.மஹிந்த என்பவரை 2002 ஆம் ஆண்டு ஒக்டோபர் 15 கடத்திச்சென்று வெட்டிக்கொலைச்செய்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்தே மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் எச். குலதுங்க இந்த ஐவருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  

No comments

Powered by Blogger.