யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இப்தார் (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழான் இப்தார் நிகழ்வு மாணவர் பொது அறை மண்டபத்தில் முஸ்லீம் மஜ்லீஸ் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததது.
அமைப்பின் தலைவர் எம்.சர்ஜுன் தலைமையில் நேற்று ஆரம்பமான இந்நிகழ்விற்கு அதிதிகளாக விஞ்ஞான பீடாதிபதி எஸ் சற்குணராஜா,கலைப்பீட சிரேஸ்ட பதிவாளர் கே.ஞானபாஸ்கரன், சிரேஸ்ட விரிவுரையாளர் கே.தபோதரன், யாழ் கல்வி வலய உத்தியோகத்தர் அப்துல் ஜலீல்,யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஆசிரியரும் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் வருகை தரும் விரிவுரையாளருமான அஷஷெய்க் பைஸர் மதனி ஆகியோருடன் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
முதலில் ஹிராஅத் ஒதலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வு அதிதிகளின் உரை மற்றும் மார்க்க சொற்பொழிவுடன் தொடர்ந்து இறுதியாக இப்தார் நிகழ்வு நிறைவடைந்தது. இதில் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி கற்கும் மருத்துவ, விஞ்ஞான ,வர்த்தக,கலைப்டம் என 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteMasha allah
ReplyDelete