Header Ads



டுபாயில் சாதனை படைக்கப்போகும் குடிநீர்

துபாயில் இயங்கி வரும் 'துபாய் கேர்ஸ்' என்ற தொண்டு நிறுவனம் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வாழும் குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி செய்து வருகிறது.

இந்த கல்வி தொண்டுக்காக இயற்கை தாதுக்கள் நிறைந்த 'மாசாபி' என்ற 1 1/2 லிட்டர் குடிநீர் பாட்டிலை இணையதளம் மூலம் ஏலத்தில் விட அந்நிறுவனம் முடிவு செய்தது.

அடிப்படை விலையான 1 1/2 திர்ஹம் என்ற அளவில் இருந்து தொடங்கிய இந்த ஏலம், கடந்த (மே) மாதம் 9ம் தேதி நிலவரப்படி 5 ஆயிரம் 500 திர்ஹம் என்ற நிலையை எட்டியுள்ளது.

ஜூன் 30ம் தேதி வரை ஏலம் தொடரும் என்பதால் ஏலத்தின் இறுதி தொகை 7 ஆயிரம் திர்ஹத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு திர்ஹம் என்பது இந்திய மதிப்பிற்கு சுமார் 16 ரூபாய் ஆகும். உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட குடிநீர் இதுவாக தான் இருக்கும் என ஏல நிறுவனத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.