Header Ads



ஜேர்மனி + தென்கொரியா சிங்கங்கள் இலங்கைக்கு வருகின்றன


ஜேர்மனி மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு மூன்று சிங்கங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன.

இம்மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் இந்த சிங்கங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஜேர்மனியிலிருந்து இரண்டு பெண் சிங்கங்களும், தென் கொரியாவிலிருந்து ஆண் சிங்கமொன்றும் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் 6 சிங்கங்கள் காணப்படுவதுடன், அவை மிகவும் வயதான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 20 வருட காலப்பகுதியில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலைக்கு வேறு நாடுகளிடமிருந்து சிங்கங்கள் கிடைக்கவில்லை என்றும் மிருகக்காட்சி சாலையின் பேச்சாளர் குறிப்பிட்டார். nf

No comments

Powered by Blogger.