செய்திக்கு பயன் - கல்முனை தோணா சுத்தம் செய்யப்படுகிறது
(எம்.வை.அமீர்)
கடந்த 29.05.2013 ல் யாழ் முஸ்லீமில் வெளியான “கல்முனை மாநகர சபை கண் திறக்குமா?” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் பயனாக இன்று காலை சாய்ந்தமருது தோணா பிரதேசத்தின் இரு மருங்கும் கல்முனை மாநகர சபையினால் சுத்தம் செய்யப்படுகின்றது. இன்று செய்யப்படுகின்ற இவ்வாறான செயற்பாடுகள் தொடராக செய்யப்படுவதுடன் இப்பிராந்திய மக்களும் தோணாவின் சுத்தம் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும்.
தோணாவை அண்டிய பிரதேசம் சுத்தம் செய்யப்படுவதையிட்டு கல்முனை முதல்வருக்கு இப்பிராந்திய மக்கள் நன்றி கூறுவதுடன் தோணாவை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து சாய்ந்தமருதிதுக்கு அழகூட்டகூடியவாறு இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் மக்கள் விரும்புகின்றனர்.


Post a Comment