முஸ்லிம்களை மீள்குடியேற்றாது வடமாகாண சபை தேர்தல் வேண்டாம் - ஹெல உறுமய
சனத்தொகை பரம்பல் தொடர்பில் கவனம் செலுத்தாது தேர்தல் நடத்தக் கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. வடக்கின் சனத்தொகைப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில் தேர்தல் நடத்துவது உசிதமானதல்ல எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்னசிங்க தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து சிங்களவர்களும் முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த சிங்களவர்களும் முஸ்லிம்களும் மீள் குடியேற்றாது தேர்தல் நடத்துவது ஏற்புடையதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். gtn

ஊதுங்கடா சங்க.
ReplyDeleteவடக்கில் சிங்களவர் எங்கிருந்தார்கள்? சும்மா புலுடா விடாமல் போங்கய்யா. என்னடா ஜாதிக ஹெல உறுமய சும்மா பேசமாட்டாங்களே எண்டு பாத்தா கத அப்பிடிபோகுது.
ReplyDeleteஉலகத்தில் எல்லாமனிதர்களும் ஒன்றுதான் ஆனால் அவன் நம்பிக்கையின் அடிப்படையில் வேறாகப் பிரிந்துள்ளான் அவைகளே மதங்களாகப்பிரிந்துள்ளது. ஆனால் மனிதர்கள் யாவரும் அறிவுடனே படைக்கப்பட்டுள்ளான் அதேவேளை அறிவை பெருக்கிக்கொள்வதும் அதனை பயன்படுத்திக்கொள்வதும் அவனவன் கையிலேதான் உள்ளது..
ஆக பார்கலாம் பொறுத்திருந்து யாரை இவர்கள் மடையர்களாக்க எண்ணியுள்ளார்களென்பதை.....