மாணவியிடம் 2 இலட்சம் கேட்ட முஸ்லிம் பாடசாலை
மாவனல்லையில் ஒரு முஸ்லிம் பாடசாலையில் மாணவி ஒருவரின் கல்வி பெறும் உரிமைக்கு அநீதி இழைக்கப் பட்டுள்ளதாக மாவனல்லை வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பாடசாலை அனுமதிக்காக பெற்றோரிடம் பணம் பெறுவதை கல்வி அமைச்சு தடை செய்துள்ள நிலையில் இரண்டு லட்சம் ரூபாய் கேட்டகப்பட்டு, மாணவி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்இ குறிப்பிட்டுள்ளது. இது தமிழ் நாட்டில் நடக்கும் சீதனக் கொடுமையை ஞாபகமூட்டுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாணவியின் தந்தையுடன் தொடர்கொண்டு மேலதிக விபரங்களைக் கேட்டு அறிந்து கொள்ளமுடியுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி குறித்து குறித்த பாடசாலைக்கு மாற்றுக்கருத்து இருப்பின் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக எமக்கு அனுப்பிவைக்கலாம். வாசகர் உரிமை அடிப்படையில் அதனை நாங்கள் பிரசுரிக்க தயார்.
இந்த செய்தி குறித்து குறித்த பாடசாலைக்கு மாற்றுக்கருத்து இருப்பின் அதனை அவர்கள் உத்தியோகபூர்வமாக எமக்கு அனுப்பிவைக்கலாம். வாசகர் உரிமை அடிப்படையில் அதனை நாங்கள் பிரசுரிக்க தயார்.

Post a Comment