சம்மாந்துறையில் இன்று யானைகளின் அட்டகாசம்
(முஹம்மது பர்ஹான்)
சம்மாந்துறை தீவு வட்டயில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் தங்கி தொல்லை கொடுத்து வருகின்றது. இவ்யானைகளில் சில இன்று (o2-04-2013) சுமார் 7.50 மணி அளவில் சம்மாந்துறை நெல்லுப்பிடி சாந்தி அருகில் வந்து நின்றதனால் மக்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அங்கு கூடிய மக்கள் யானைகளை பட்டாசு வெடிகள் சுட்டு மீண்டும் விரட்டினர்.
தீவு வட்டயை அண்மித்த பகுதிகளில் கடந்த சில தினங்களாக யானைகளின் அட்டகாசம் பெருதும் அதிகரித்துள்ளது.மேலும் அப்பகுதியை அண்மித்த மக்கள் அவதானமாக இருப்பது அவசியமாகும்.

Post a Comment