Header Ads



பொதுபல சேனாவை சீர்குலைக்க சூழ்ச்சி - கலகொட அத்தே ஞானசார தேரர்



(VI) ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சில இணையத்தளங்கள் இணைந்து பொதுபல சேனா அமைப்பை தடைசெய்து, அதன் நடவடிக்கைகளை சீர்குலைக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தமது அமைப்பை சீர்குலைக்கவோ, தடைசெய்யவோ எந்த சக்திக்கும் இடமளிக்க போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இணையத்தளங்கள் ஊடாக பொதுபல சேனாவுக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த இணையத்தளங்கள் பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பு என தெரிவித்துள்ளன. அதேவேளை பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என முஸ்லிம் அடிப்படைவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பொதுபல சேனா அமைப்பின் கடிதத் தலைப்புகளை பயன்படுத்தி ஊடகங்களுக்கு போலியான அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அமைப்பின் கடிதத் தலைப்புகள் ஊடாக முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு அறிக்கைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

8 comments:

  1. Kudikkara...poiyane!!!!!

    ReplyDelete
  2. சுத்தப் பொய்களையெல்லாம் கட்டவிழ்த்து சமூகத்தை சீரழித்து, பௌத்த சித்தார்த்தங்களை மாசுபடுத்தி, குடிபோதையுடன் கையுமையுமாக மாட்டிப்பட்ட நீ இன்னும் ''மம ஸுத்தா'' என்று சொல்றாயே. கேவலமடா இது கேவலம். உனக்கு மட்டுமல்ல உன் சமூகத்துக்கே சேறு பூசினாயடா. கீழ்தரமானவனே புனிதமிக்க அல்குர்ஆனை கையில் வைத்துக்கொண்டே நீ உரைத்த பொய்கள் உன் கபடத்தனத்துக்கு சான்றடா. உன் போன்ற கயவர்களை இந்நாடு ஒருபோதும் மறக்காதடா.

    ReplyDelete
  3. empaa jm,
    ungalukku sonna puriyatha?
    inth narik koravanin intha pukaippadaththai
    pirasurikka vendaam edrome!

    ReplyDelete
  4. ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திற்கு எனது அன்பான வேண்டுகோள்! இதன் பிறகு நீங்கள் BBS சம்பந்தமான செய்திகளை பிரசுரிக்கும் பொழுது புனிதமான அல்குர்ஆனை கையிலெடுத்து விளக்கம் சொல்ல அருகதயே இல்லாதவன் உண்மைய பொய்யாகவும்இஇல்லாதத உருவாக்கியும் சொல்லுகின்றவன் கையில் அல்குர்ஆனை வைத்துக்கொன்டு இருக்கும் இந்த படத்தை வெளியிட வேண்டாமென தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இதை பார்க்கப் பார்க்க ஆத்திரமும் கோபமும் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. Pls jafnamuslim, take action to this sadgecent as soon as posible

      Delete
  5. இப்படியே விட்டால் கூட்டங்களில், ஊடகங்களில் பேசியது நாங்களல்ல; எங்களைப் போன்ற வேறவர்கள். எங்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த அப்படிச் செய்தார்கள் என்பார்களோ??!!!!!!!!!

    ReplyDelete

Powered by Blogger.