முஸ்லிம்களுக்கு எதிராக ஹர்தாலுக்கு அழைப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக 04-04-2013ம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம் சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம். எனும் தலைப்பில் ஆதி திராவிட சேனன் படையினால் துண்டுப்பிரசுரம் ஒன்று மட்டக்களப்பு நகர தமிழ் வர்த்தகர்களுக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.-(துண்டுப்பிரசுரம் இணைப்பு)
அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பின்வருமாறு
(விழித்தெழுவீர் தமிழ் சிங்கள சமூகம். சுனை கெட்ட சோனகரின் மதி கெட்ட செயலை எச்சரிக்கின்றோம்.)
1,மதி கெட்ட சோனகனே .சிந்திக்கா விட்டால் மாணவ சமூகத்தில் பிரிவினைகள் ஏற்படும் என்பதை எச்சரிக்கின்றோம்.
2,ஹலால் (அறாம் )ஹராம் இதன் எதிரொலி சகல உணவு வகையிலும் வந்தால் பாடசாலை சிறுவர்கள் உணவு பரிமாற்றம் செய்யும் போது (அறாம் ) ஹராம்- ஹலால் வரும் அவ்வேளை அறியா பருவத்தில் இருக்கும் சிறு பிஞ்சு உள்ளம் படைத்த பாலர்கள் மனதில் உனது வைராக்கியம் பதியும் என்பதை எச்சரிக்கின்றோம்.
3,உனது சமூகத்தின் உணவுக்காக மிருக கழுத்தை அறுக்கும் நீ உழைப்புக்காக மனிதனின் கழுத்தை அறுக்காதே என எச்சரிக்கின்றோம்.
4,கிழக்கில் சோனக சமூகம் செய்த தமிழ் இன படுகொலையை இராணுவம் மீது சாட்டினாய்.இனி இந்த சொறி வேட்டை பலிக்காது சீண்டினால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் தடுக்க முடியாது.உமது சமூகத்தின் இறைவன் அல்லாஹ்வே உன்னை தண்டிப்பார் என எச்சரிக்கின்றோம்.
5,கிழக்கில் இன உறவை உணவு,உடை ரீதியாக பிளவுகள் ஏற்படுத்துவதற்காக 25-03-2013 அன்று கடையடைப்பு செய்து தமிழ் சமூகத்தை விரோதியாக காட்டியதற்கும் தமிழ் சமூகம் சோனகர்களின் கடைகளில் பொருட்கள் கொள்வனவு செய்யாவிடின் சோனகர்களால் சம்பாதிக்க முடியாது என்பதையும் தெரிவிக்கும் முகமாகவும் ,எச்சரிக்கும் முகமாகவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ,வர்த்தக நிலையங்கள்,அரச திணைக்களங்கள் அனைத்தையும் 04-04-2012ம்த pகதி அன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு அறை கூவலிடுகின்றோம்.
தன்மானமுள்ள அனைத்து தமிழனும் இதில் பங்காளி ஆக வேண்டும். ஆதி திராவிட சேனன் என்று அந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Its a joke.. No tamils will support those BBS. Even most of Buddhist are not supporting them.. This is done by a school kid..LOl
ReplyDeleteஅரசுக்கு ஆலாவட்டம் பிடிக்கும் இனவெறியாளர்களின் ஒட்டு மொத்த சதிவலை, தமிழ் -முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தி அதில் குளிர்காய எத்தனிக்கும் வல்லூறுகளின் விஷப்பரீட்சை.
ReplyDeleteபோலிகளைக்கண்டு ஏமாற வேண்டாம். நிச்சயம் இது ஒரு ஐந்து பேருக்குட்பட்ட பொடிப்பிள்ளைகளின் விளையாட்டு.
ReplyDeletewe know all this nonsense from BBS. now they divert the tamil people against to muslims as they cannot do anything in eastern.
ReplyDeleteஇது கிழக்கிலுள்ள இனங்களுக்கெதிரான குழப்பங்களை ஏற்படுத்தக்கூடிய தீய சக்திகளின் செயல்பாடு இதை முஸ்லிம்களொ, இந்துக்களோ நம்பவேண்டாம் மாறாக நமக்குள் ஒற்றுமையை மேலும் வழர்ப்போம்.
ReplyDeleteWe cant ignore it should be vigilant
ReplyDeleteethu oru sila visamihalin kulappum thanmai tamil,muslimkale ottumaiyaha erunthu kollungal p[lz
ReplyDeleteஇது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை வடகிழக்கில் இலகுவாக செயற்படுத்த கங்கணம் கட்டியிருக்கும் பொதுபல சேனாவின் இன்னொரு கைங்கரியம்.இதற்கு தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது.
ReplyDeleteதமிழ் மக்களுக்கு ஏற்பட்ட போர்க்குற்றத்தை மறந்து விட்டு
ReplyDeleteதமிழ்-சிங்கள சமூகம் என கூட்டுச் சேர்க்கும் மடையர்களடா நீங்கள்.
உண்மையான தமிழ் சகோதரர்கள் இப்படி செய்யமாட்டார்கள்.
3-4 பேர் தான் இந்த ஆதி திராவிட சேனன் என்ற துண்டுப்பிரசுர உரிமையாளர்.
உண்மை என்னவென்றால் எமது சிறார்கள் கூட கடைக்குப் போனால் ஹலால் ஹறாம் பார்த்துத் தான் கொள்வனவு செய்கின்றனர். மாஷா அல்லாஹ்...
இதுவே போதும் எங்களுக்கு...
மட்டக்களப்பில் தமிழ் சகோதர கடைகள் அடைத்தாலும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கடைகளே போதும். போங்கடா!!!
Dear brothers, DO NOT under estimate this, i remember i have read a note few days ago under Anvermunatunge web site (see link) which states at the bottom about a plot they (Zionist)developed upto spreading the work IN TAMIL AT BATICALOW.
ReplyDeleteNow this is the reflection of the very plot....
http://www.anvermanatunga.com/english/secrets-exposed-bbs-and-zionist-link/#more-560
How they(Zionist) plan inside Sri Lanka
- back in 2007, 3 out of 4 guys came back to Sri Lanka.
- Start their campaign on community sites like FB and Forum. Elakiri was famouse by that time. They posted all kind of racist post on Elakiri. Once they were banned, they started building up Sinhala medium websites back in 2008 April.
- They had translated English websites to Sinhala. And most current issues were taken from AnsweringIslam.com
- Peramunerala, Darmadeepayeiranama, musalmanuva anniisa, are the fist one to create.
- They started “VIRTUAL GROUPS” on the internet against Islam.
- And they started sorting the out for Monks groups, University groups, Media groups etc. (As you said)
- They had taken the Internet websites to practical groups
- Monks openly talked against Islam on TNL, Swarnawahini and all medias
- Papers were written completely against Islam
- Hand bills were spreading out all over
- Now they developed upto spreading the work IN TAMIL AT BATICALOW
- Soon their team will assign different task to create incident.
Please brothers don't send your hand bills by post come to Bazaar like BBS. don't be hide. If you are saying correct things we can stop our wrong activities.
ReplyDeleteITHATKUM TAMILARKALUKUM ENTHA SAMBANTHAMUM IRUKKAATHU ENRU URUTHIYAAGA SOLLA MUDIYUM THETKU INAVAATHIKALIN KILAKKU AGENTUKKALIN VELAIYE ITHU ENBATHU THUNDU PIRASURATTHIN VAASAGANGKAL URUTHI SEIKINTRATHU.
ReplyDeleteThis protest is made by School Children
ReplyDeleteவெல்லம் தின்பது ஒருவன் விரல்சூப்புவது இன்னொருவன் என்பது போல் இருக்குது கத சம்பிக்கமட்டும்தான் வரலாற்றைn மாற்றுகிறான் என்றால் இப்ப நம்ம தமிழனும் மாற்றுகிறானா கிழக்கு மாகானத்தில் காத்தான்குடியில் அவர்களின்ற பள்ளியில தொழும்போது 113 போரை கொண்றது நம்ம தமிழன் 1990 ஆண்டு ஹஜ் யாத்திரகர் 98 பேரை பஸ்சோட கொண்றது நம்ம தமிழன் அக்கரப்பத்துல 35 பேர் கல்முனையில 48 பேர் புட்டம்பை என்னிற கிராமத்தையும் அடியோட அழிச்சது நம்ம தமிழன் மருதமுனையில கனபேர் ஏறாவூர்ல எககச்சக்கமான பேர் ஓட்டமாவடியில ஒரு தொகைப்பேர் இப்படி நம்ம ஈழத்தமிழன் செய்த கொலை போதாதற்கு கிழக்கில் சோனக சமூகம் செய்த தமிழ் இன படுகொலையை இராணுவம் மீது சாட்டினாய் என எழிதி இருக்கிறாய் தம்பி ரெம்ப துள்ளாதே உலகபயங்கரவாதியாக பேர் எடுத்த தமிழ் ஈழப்புலிகள் சோனகர்ல கைவைச்சதோடதான் விலாசம் தெரியாதவர்களாய் போனார்கள் இலங்கை வரலாற்றைப்பார் திமிலர்களிடம் இருந்து முக்குவர்களை காப்பாத்தி நமக்கு சோனகன் உதவினதாலாதான் கிழக்கு மாகானத்தில நம்ம விலாசம் இன்றுவரைக்கும் நீடிச்சிருக்கு கிழக்கு மாகானத்தில் குறுமன் வெளி இந்துக்கொவிலில் தொப்பி போட்டசிலைக்கு பட்டானிப்பூசை இன்று வரைக்கும் நடககுதே அது என்ன தெரியுமா சோனகர்கள் முக்குவ தமிழனக் காப்பாத்தி தந்த நன்றிக்கடன்
ReplyDeleteதமிழ் சிங்கள சமூகம் இல்லை. தமிழர்களின் சமூகம் சிங்களவர்களின் துப்பாக்கி முனையில் இலங்கையில் வாழ்கின்றார்கள். ஐநாவையும் இந்தியாவையும் எப்ப மணி அடிப்பாரகள் என்று ஏமாந்து , வியப்பு தெளியவில்லை. இதென்ன இப்படி ஒரு கீழ்த்தரமான அறிக்கை, துண்டுப்பிரசுரம் வாழ்க்கையில் இதுவரை நான் வாசிக்கவில்லை. இதுதான் வம்பு என்கின்றது. என்ன அரசாங்கமடா இது. பொது பல சேன ஆட்சியில் இருக்கிறதா.இனங்களை பிரிக்கிறத்திறகு ஒற்றை காலில் விடாப்பிடி.
ReplyDeleteஇது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை குலைத்து பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலை வடகிழக்கில் இலகுவாக செயற்படுத்த கங்கணம் கட்டியிருக்கும் பொதுபல சேனாவின் இன்னொரு கைங்கரியம்.இதற்கு தமிழ்-முஸ்லிம் சமூகங்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது.
ReplyDeleteதமிழா, 30 வருட காலம் ஓட்டிய இரத்த ஆறு கண்டு இன்னுமா அடங்கவில்லை உன் வெறி, வேற்றுமை பேசிப்பேசியே நமக்குள் விரிசலை தோற்றுவித்து குளிர்காய்ந்தோரெல்லாம் மாண்டதுதான் மிச்சம் கண்ட பயன் யாது?. இன்றும் நாம் 30 வருடத்திற்று முன்பு வாழ்ந்தது போல் அன்றாடத்தேவைகளுக்கு அலையும் கூட்டமாகத்தான் வாழ்கின்றோம். சிந்தித்து செயலாற்று. இது பயத்தால் சொல்லவில்லை உன் மீது கொன்ட பாசத்தால் சொல்கிறேன்.
ReplyDeleteஆதி திராவிட சேனன்கூறூம் கிழக்கில்இரத்தஆறுஓடும் தடுக்க முடியாது>
ReplyDeleteஉங்கள் முகத்தை காட்டு.உங்கள்அமைப்பி்ன்
nichayamaaka ithu thamil sakotharkalin vilayaaddu alla
ReplyDeleteஇது ஒரு நிறைவேற முடியாத சதித்திட்டம் கிரீஸ் மனிதனை தயார் செய்தவர்களே இதையும் தமிழ் அமைப்பின் பெயெரால் செய்திருக்கலாம் அல்லவா? சிங்கள பகுதியில் தோல்வி கண்ட இவர்கள் கிழக்கில் முஸ்லிம்களின் கடை அடைப்பு பெரும் பாதிப்பையும் அரசின் தோல்வியையும் காட்டியுள்ளது! முஸ்லிம்கள் தற்போது இந்த அரசின் முஸ்லிம் அமைச்சர்களோடு இல்லை என்பது புரிந்து விட்டது அதனால்தான் இதுவெல்லாம் அரங்கேறுகிறது
ReplyDeleteஅவசரகால சட்டத்தின் தேவையெய் உணர்ந்தவர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டாம்
ReplyDeleteஇது நிச்சயமாக தமிழர்களால் எழுதப்படவில்லை ,தமிழ் கற்றவர்களால் எழுதப்பட்டுள்ளது,தமிழ் முஸ்லீம் உறவை விரிசலாக்க வேண்டாதவர்களால் செய்யப்படும் சதி ,இன்றைய வர்த்தகம் நவீன பண்டமாற்று.தமிழர்களது மீனை முஸ்லீம்கள் வாங்க முஸ்லீம் கடைகளில் தமிழர் கொள்வனவு செய்யவில்லையா?இது வரை எந்தத்தமிழனும் ஹராம் பற்றி மூச்சு விடாத பொது இது புது விடயமாக இருக்கின்றது.90 களில் நடந்த இனப்பிரச்சினைகளின் பின்னரும் நடந்ததை மறக்கவே இரு சமூகமும் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது,இந்நிலையில் இதைக்குலைக்க சதோன்று நடக்கின்றது எனவே எனவே மட்டக்களப்பு மக்கள் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
ReplyDeleteசிறு பிள்ளை சிறு பிள்ளை எனும் சகோதரர்களே! இந்த வாதத்தை எதை அடிப்படையாக வைத்து கூறுகிறீர்கள்? துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தால் புரிகிறது பலமான பின்புலத்துடன் துவேஷத்திலும் காழ்ப்புணர்விலும் ஊறிய ஒருவரால் வரையப்பட்டது என்பது. BBS உடன் தொடர்புபட்ட அல்லது BBS ஐ ஒழுங்கமைத்த ஒரு சக்தியினுடைய அடுத்த முயற்சி. இதில் தமிழர்கலைக் குறை கூறவோ அல்லது குற்றம் சாட்டவோ நான் வரவில்லை. ஆனால் தெளிவான ஒரு விடயம் முஸ்லிம்கள் கிழக்கிலாவது கிளர்ந்தெழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரங்கேற்றப்பட்டுள்ள சதி. கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதாலும் ஏனைய இடங்களிலுள்ள பெரும்பான்மை மக்களுக்கு அங்குள்ள மக்கள் பற்றிய அறிவு இல்லாததால் வேண்டிய பொய் சொல்லலாம் என்பதாலும் இவர்களின் பலத்தை மென்மேலும் அதிகப் படுத்திக் கொள்ள அங்குள்ள அரச சார்பு மற்றும் முஸ்லிம் விரோத எண்ணம் கொண்ட யாரையோ பயன்படுத்துகின்றார்கள். கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியின் சமீபத்தைய நடவடிக்கைகள் நம்மை இன்னும் சந்தேகிக்க வைக்கிறது. அங்கேயும் ஒரு இன முறுகலை ஏற்படுத்தி "அல் குவைதா" முத்திரை குத்தி விட்டால் மக்கள் இலகுவாக நம்பி விடுவார்கள். இவர்கள் காரியம் இலகுவாகிவிடும். இந்த விடயத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். அவசரமாக உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் விடயங்களை தீர விசாரித்து, நிதானமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ReplyDeleteஎன் அன்பிற்குரிய தமிழ் மக்களே!
இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நாம் ஒன்றாக இருக்கும் வரை நமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது என்பது யாரும் அறிந்த உண்மை. ஆனால் எங்களுக்கு அந்த நம்பிக்கையை இல்லாமல் செய்தது உங்களில் உள்ள இது போன்ற துவேஷிகள் தான். எழுத்துக்கு வேண்டுமென்றால் எவ்வளவும் எழுதலாம். ஆனால் நடைமுறை மற்றும் அனுபவம் என்று பார்த்தால் எங்களால் மறக்க முடியாத கசப்பான வரலாறு உள்ளது. இது போன்ற துவேஷம் பேசும் புல்லுருவிகளைக் களை எடுங்கள், நீங்கள் மக்களுடன் பழகும் போது மனது விட்டுப் பழகுங்கள். அன்போ, வெறுப்போ வெளிப்படையாகக் காட்டுங்கள். உங்களை தாழ்த்திப் பேசவோ அல்லது திட்டுவதட்கோ நான் இதைக் கூறவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தவும் உங்களது நிம்மதியான வாழ்வுக்கும் உங்களுக்குள் சமூக மாற்றம் தேவை என்பதற்காய் சொல்கிறேன். இவ்வழிமுறையைப் பின்பற்றுவதால் தான் நாங்கள் இந்நாட்டில் சிங்கள, தமிழ் இனங்களால் நசுக்கப்பட்டும் கூட புன்னகைத்த முகத்துடன் இருக்கிறோம். இது தான் இலங்கைச் சோனகனுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம். எவ்வளவு இலகுவாக, இயல்பாக விடயங்களைக் கையாள்கிறோம் என்று நீங்கள் பார்க்கவில்லையா? இந்த பிரச்சினையை வைத்து எனக்குத் தெரிந்தே எத்தனையோ தமிழ் சகோதரர்கள் உள்நோக்கத்துடன், எங்களைக் கிளர்ந்தெழ வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் எப்படி எப்படியெல்லாம் பேசுகிறார்கள். தமிழ் ஊடகங்களைப் பாருங்கள்! அவர்கள் அனைத்து ஆக்கங்களும் இதையே கருப் பொருளாக வைத்த காய் நகர்த்தல்கள். மேலோட்டமாகப் பார்த்தால் முஸ்லிம்களுக்காக செயற்படுவது போல தெரிந்தாலும், உற்று நோக்குபவர்களுக்குப் புரியும் இவர்கள் இலக்கு ..
ஒன்றும் வேண்டாம் இந்த ஒரு விடயத்தைப் பாருங்கள். BBS என்ன துவேஷத்தைப் பேசினாலும் நேரே நின்று பேசுகிறான். ஆனால் இங்கு; திரை மறைவில்.... அப்புறம் சொனகர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? நீங்கள் நல்லிணக்கத்தை வேண்டாம், துவேஷத்தை முதலில் நேரடியாகப் பேசுங்கள். நங்கள் உங்களை நம்புவோம்.
இவ்விடயங்களை நான் இனநல்லிணக்கத்தை மைய்யமாக வைத்தே கூறினேனே தவிர இன விரிசலுக்கல்ல. நிதானமாக, ஆழமாக சிந்தியுங்கள் நான் கூறிய உண்மைகள் புரியும். இவை எட்டுச் சுரக்காய் அல்ல அடி வாங்கிய இலங்கைச் சோனகனின் அனுபவம்..