Header Ads



நைஜீரியா கடற்பரப்பில் இலங்கையர்கள் 3 பேர் கடத்தப்பட்டனர்


இலங்கை பிரஜைகள் மூவர் உட்பட ஐவர் நைஜீரியா கடற்பரப்பில் வைத்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கடல்சார் பணியகம் அறிவித்துள்ளது.

சரக்குக் கப்பலில் இருந்தவர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அந்த பணியகம் அறிவித்துள்ளது.ஏப்ரல் 25 ஆம் திகதியே இவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பணியகம் இலங்கையைச்சேர்ந்த மூவரை தவிர ஏனைய இருவரும் ரஷ்ய மற்றும் மியன்மார் நாட்டு பிரஜைகள் என தெரியவந்துள்ளது.

ஆயுதம் தாங்கிய 14 பேர் கொண்ட குழுவினர் இந்த கப்பலை கடத்தியுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.