Header Ads



அமைச்சர் அதாவுல்லா தலைமையில் இரத்தின தீபம் விருது வழங்கும் நிகழ்வு (படம்)



(முஹம்மட்)

மலையக கலாசார பேரவையின் 18வது வருடாந்த நிறைவையொட்டி அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பல்துறை சார்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,சமுக சேவையாளர்கள் ஆகியோரைப் பாராட்டிக் கௌரவிக்கும் இரத்தின தீபம் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (10) மாலை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், மலையக கலாசார பேரவையின் ஸ்தாபக தலைவர் ராஜா ஜோன்கின்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் 23 பேர் அதிதிகளால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




4 comments:

  1. நாடும் முஸ்லிம்களும் இருக்கும் நிலையில் ரொம்ப முக்கியம்.

    அதானே பார்த்தேன் ...நேற்று சுபஹு தொழுகைக்கு பின் நடந்த கூட்டத்தில என்னடா காக்காவ காணமெண்டு ?

    காக்காவுக்கு பொழுதுபோக்கான விஷயம் எண்டா சும்மா நூறுல ........உதாரணத்துக்கு ?

    குறட்டை விட்டு தூங்குவது, சமூக விடயங்களில் ஒன்றும் செய்யாமல் காலத்தை கடத்துவது, ஏழைகளின் வயிற்றில் (நுரைச்சோலை வீடு) அடிப்பது, இசை கச்சேரி நடத்துவது, அவர் உழைத்த ஹலான பணத்தில் ஹலான முறையில் வெடில் சுட்டு மகிழ்வது, அடிக்கடி கலாச்சார நிகழ்ச்சி என்று தலை காட்டுவது, தன் ஊர் மக்களுக்கு பூச்சாண்டி காட்டி மக்களை கிறுக்கனாக்குவது, போதாக் குறைக்கு பள்ளி நிர்வாகங்களில் தலை இடுவது அல்லாவிட்டால் தன் அடி வருடிகளை பள்ளிக்கு அனுப்புவது (தொழ அல்ல) இன்னும் பல ...................

    என்ன ஒன்று இந்த ஞானக் காக்காடையும் , காக்காட கூட்டத்தோட பார்வையிலும் இதெல்லாம் உயர்ந்த சமூக சேவை.

    ReplyDelete
  2. muslimkalathu halal urimaiyai perinavaathikalin soolchchiyal parikkappadukirethu.
    Amaichcher avarkal arasankaththin sellap pillaiyaka sokusakavum sukapoaka vaalkkai vaalnthu varukirar.
    Avarukku samookam meethum muslimkal meethum pattu illai.

    ReplyDelete
  3. நாட்டில் எது நடந்தால் எனக்கென்ன என வய்று வளர்க்கும் இவர்களை முதலில் ஒழித்துக்கட்ட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.