Header Ads



இலங்கையுடன் இணைந்து செயற்பட விருப்பம் - இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு


(Sfm) இஸ்ரேல் மக்களின் நலன் கருதி இலங்கையுடன் இணைந்து செயல்பட தாம் எதிர்பார்ப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இஸ்ரேலிய பிரதமரை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் காணப்பட்ட வலுவான மற்றும் வளமான ஆதனங்கள் மூன்று தசாப்பத காலமாக நிலவிய யுத்தம் காரணமாக அபிவிருத்திக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை குறித்து அமைச்சர் தெளிவு படுத்தியுள்ளார்.

இது தவிர, நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பாகவும், இஸ்ரேலிய பிரதமருக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

.................................................................................................................................

ஈரானுடன் சிறிலங்கா உறவுகளை வைத்துக் கொள்வதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடும் கவலை வெளியிட்டுள்ளார்.  இஸ்ரேலுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்காக ஜெரூசலேம் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடமே, இஸ்ரேலியப் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரானிடம் இருந்து, தமது நாடு கடுமையான பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.  இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்காக ஜெரூசலேம் சென்ற பீரிசுக்கு, ஈரானுடனான நட்புறவைச் சுட்டிக்காட்டி நெதன்யாகு கண்டித்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஜெரூசலேம் செல்வதற்கு முன்னதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், ரமலாவுக்குச் சென்று பாலஸ்தீன அதிபர் அப்பாசை சந்தித்து குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. அதுதானே செயற்படத் தொடங்கியாச்சு. இதுக்குப் பொறகும் என்ன விருப்பம் தெரிவிக்கின்றது. ஈரானுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

    ReplyDelete
  2. ADA MODAYA IF ISRAIL COME DO YOU KNOW YOU CAN NOT LIVE IN PEACE NO BODY LIKE ISRAIL IN THE WORLD, YOU ARE GOING TO BRING SEITHAN TO YOUR HOME

    ReplyDelete
  3. ஆரம்பம் மீண்டும் ஒரு துன்பம்....!
    ஜே.ஆர் ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இஷ்ரேலிய நலன் பிரிவு இயக்கமொன்ரு ஆரம்பிக்கப் பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆலும் கத்சியிலிருந்த 13 முஷ்லிம் பாராலுமன்ற உருப்பினர்கலும் பத்வி விலக வேண்டுமென பாரிய எதிர்ப்பலைகல் உருவாகின. ஒரு தொண்டமான் சையும் வேலையை 13 புண்டமானாலும் சைய முடியவில்லையென அங்கலைத்தனர்.முச்லிம் காங்ரஷ் உருவாகிய போது இதுவும் ஒரு குரலாய் இருந்தது. பிரேமதாச எதிர்த்து நின்ரார்.அதேபோல் ஆட்சிக்கு வந்தபோது மூடியும் விட்டார். இப்போ எதுவெல்லாமோ நடக்குது ஒன்ருமே கானவில்லை. தனித்துவ கட்சி என்ரு சொல்பவர்கல்,முஷ்லிம்கலின் நலனுக்காய் பிரிந்து சென்ரோம் என்ரவர்கல்,கட்சி மாரும் சோப்புத் தொப்பி, மூத்த அரசியல் வாதியெனும் வெல்ல தாடி, தொலில் சன்க வாதியாம் உயர்ந்த மனிதன் வெண்னிர ஆடை?
    ஒருவரையும் காணவில்லை கண்டு பிடித்து தருபவர்கலுக்கு தகுந்த சன்மானம் உண்டு.

    ReplyDelete
  4. நாட்டில் நடப்பவைகள் அனைத்தையும் ஒன்று படுத்தி பார்த்தால் ராஜபக்ஷ & கம்பெனி மீளமுடியா யூத, மேற்குலக பொறிக்குள் மாட்டிக் கொண்டுள்ளனர் என்று தோணுது...

    ReplyDelete

Powered by Blogger.