அமராவும், விதுரவும் ஜனாதிபதி மஹிந்தவினால் ஜப்பான் இளவரசியிடம் கையளிப்பு (படம்)
ஜப்பான் - இலங்கை நீண்டகால நல்லுறவின் அடையாளமான இரு யானைக் குட்டிககள் ஜப்பானுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
டோக்கியோ 'தாமா" மிருகக் காட்சி சாலையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் 8 வயதான 'அமரா" மற்றும் 5 வயதான 'விதுர" ஆகிய இரு யானைக்குட்டிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த வைபவத்தில் கலந்துகொண்ட ஜப்பானிய இளவரசி இக்சுகோ டகமாடோ இலங்கை ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். ஜப்பான் சிறுமிகள் சிங்கள மொழியிலும் ஜப்பான் மொழியிலும் பாடல்கள் இசைத்து ஜனாதிபதியையும் பாரியாரையும் வரவேற்றனர்.



Post a Comment