அஹதிய்யாப் பாடசாசலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
(இ. அம்மார்)
மத்திய மாகாண முதல் அமைச்சின் முஸ்லிம் கலாசார கவ்விப் பிரிவின் ஏற்பாட்டில் அஹதிய்யாப் பாடசாசலை ஆசிரியர் பயிற்சி நெறியில் பங்கு கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கண்டி பதியுதீன் மஃமூத் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்படுவதையும் சிறப்பு விருந்தனராகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் சான்றிதழ் வழங்குவதையும் முதல் அமைச்சரின இணைப்பதிகாரி எம். ரியாழ் அருகில் நிற்பதையும் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும் பிரதம அதிதி மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க உரையாற்றுவதையும் கலந்து கொண்ட அஹதிய்யாப் பாடசாலை ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.


Post a Comment