அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய அறிவித்தல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பப்பட்டிருக்கும் தவறான தகவல் சம்பந்தமாக,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய கூட்டமொன்று இன்று மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி ஜுமுஆ மஸ்ஜிதில் நடைபெறவிருப்பதாகவும் அனைவரையும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அ. இ. ஜ. உ. வேண்டியிருப்பதாகவும் தவறான தகவலொன்று குறுஞ்செய்தி (SMS) மூலமாக பலருக்கும் அனுப்பப்பட்டுள்ள விடயம் ஜம்இய்யாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறான எந்த பொது நிகழ்ச்சியையும் ஜம்இய்யா ஏற்பாடு செய்யவில்லையென்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு குழப்பங்களை உண்டுபண்ணும் விதமான SMS களை அனுப்புவதைத் தவிர்த்து நாட்டின் அமைதிக்காக அதிகதிகம் துஆ செய்து வருமாறு அனைவரையும் ஜம்இய்யா அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Post a Comment