Header Ads



பிரஜைகள் ஊடக அபிவிருத்திப் பயிற்சிப் பட்டறை


(அப்துல் அலீம்)

சர்வோதய தலைமையகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை சர்வோதய பயிற்சி நிலையத்தில் பிரஜைகள் ஊடக அபிவிருத்திப் பயிற்சிப் பட்டறையொன்று இடம்பெற்றது.

வட மாகாணத்தில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்தும்  கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 23 பேர் இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கு பற்றினர்.

அச்சு ஊடகம், வானொலி ஊடகம், காட்சி ஊடகம், மற்றும் இலத்திரனியல் உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஊடகப் பயிற்சிகள் இங்கு வழங்கப்பட்டன. 

மூன்று தினங்கள் இடம்பெற்ற இந்த பிரஜைகள் ஊடக அபிவிருத்திப் பயிற்சிப் பட்டறையில் சர்வோதய தேசிய ஊடக இணைப்பாளர் எச்.ஜீ. நிசாந்த பிரீதிராஜ், இன்ர நியூஸ் மட்டக்களப்பு ஊடக இல்லத்தின் முன்னாள் பளிப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன், சட்டத்தரணி எஸ்.எல். ஸப்ரி, மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தைச் சேர்ந்த சம்பத் சமரகோன், அஜித் வீரகோன் மற்றும் மஸிய்யா ஹில்மி உள்ளிட்ட இன்னும் பலர் ஊடகவியல் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.





No comments

Powered by Blogger.