Header Ads



திண்மக்கழிவு முகாமைத்துவமும், சமூக விழிப்பூட்டலும் செயலமர்வு

(காதர்)

கல்முனை பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரி பயிலுனர்களுக்காக நடாத்தப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவமும் சமூக விழிப்பூட்டலும் என்ற தலைப்பிலான செயலமர்வு  கல்முனை பிரதேசசெயலகத்தில் இடம்பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கள் ஸ்தாபனத்தின் அம்பாறை அலுவலகத்தனால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.

கல்முனை பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வளவாளராக ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கள் ஸ்தாபனத்தின் இயலுமை விருத்தி பயிற்சி உத்தியோகத்தர் ஏ.அரியசுதன் உட்பட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மாநகர சபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.





No comments

Powered by Blogger.