குவைத் மன்னரை அவதூறு எழுதிய ஊடகவியலாளருக்கு சிறை
டுவீட்டரில் அவதூறு பரபரப்பியதாக பத்திரிகையாளர் ஒருவர் குவைத்தில் சிறை வைக்கப்பட்டார். வளைகுடா நாடான குவைத் நாட்டில் சமூக வலைதளங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயாத் அல்-ஹர்பி என்ற பத்திரிகையாளர் சமூக வலைதளமான டுவீட்டரில், குவைத் மன்னராட்சி பற்றியும், மேற்குல நாடுகளுடன் அவர்கள் ஏற்படுத்தியுள்ள நட்புறவு பற்றியும் அவதூறு பரப்பியாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது போன்று பத்திரிகையாளர்கள் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இது இரண்டாவது முறை.

Post a Comment