Header Ads



இருதய நோயை தடுக்க தக்காளி மாத்திரை - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு காரணமாக சீரான ரத்த ஓட்டம் இன்மையால் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க மருந்து மாத்திரைகள், உணவு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இருதய நோய்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தக்காளி மாத்திரைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியின் மேற்பரப்பில் உள்ள சிவப்பு நிற தோலில் 'லிகோபின்' என்ற ரசாயன பொருள் உள்ளது.

அதன்மூலம் தக்காளி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை தமணி ரத்தக் குழாயில் படியும் கொழுப்பை அகற்றி அவற்றை விரிவடைய செய்கிறது.

இதன்மூலம் ரத்த ஓட்டம் சீராகி மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இந்த மாத்திரையை தினமும் சாப்பிட வேண்டும். இதன் மூலம் இருதய நோயாகளிகள் பாதிப்பின்றி வாழ முடியும். மற்றவர்களுக்கு இருதய நோய் ஏற்படாது. இருதய நோய்க்கு மட்டுமின்றி நீரிழிவு மற்றும் புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.