Header Ads



மாத்தளையில் மீட்கப்பட்ட மண்டை ஒடுகளின் எண்ணிக்கை 79 ஆக உயர்வு

மாத்தளை பகுதியிலுள்ள புதைக்குழியொன்றிலிருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகளின் எண்ணிக்கை 79ஆக உயர்வடைந்துள்ளது.

79 மண்டை ஓடுகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் மனித எச்சங்களும் இந்த புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதனைத் தவிர மேலும் 12 பேரின் மண்டை ஓடுகள் அற்ற மனித எச்சங்களும் இதிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

இந்த பகுதி நேற்றைய தினமும் தோண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மண்டைய ஓடுகள் குறித்த விசாரணைகள் மாத்தளை மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியின் தலைமையில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் நிர்மாணப் பணிகளுக்காக மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தை தோண்டிய வேளையில் இந்த மனித எச்சங்கள் முதல் முறையாக கண்டெடுக்கப்பட்டன. sfm

No comments

Powered by Blogger.