Header Ads



புத்தளத்தில் துப்பாக்கிச்சூடு - முஸ்லிம் இளைஞர் வபாத்


(TM)

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலாவி நாகவில்லு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இனந்தெரியாதோரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

பாலாவி நாகவில்லு மீள்குடியேற்றக் கிராமத்தைச் சேர்ந்த முஹமது நஸார் (வயது 33) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார். 

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.