Header Ads



அமைச்சர் பௌஸியின் முன்மாதிரி (படங்கள் இணைப்பு)


(அஷ்ரப் ஏ சமத்)

பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியின் 4 கோடி ருபா பெருமதியான சொந்தக் கட்டிடத்தை முஸ்லீம் மகளிர் கல்லூரிக்கு கையளிக்க உள்ளதாக தெரிவித்தார். 

கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிலேயே அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி இவ்வாறு தெரிவித்தார்.  

இக் காணியில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப்பணிகள் முடிவடைந்ததும் அடுத்த மாத இறுதியில் இக் காணியையும் கட்டிடத்தையும் கல்லூரியில் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பதாக அமைச்சர் பவுசி தெரிவித்தார்.

நான் கொழும்பு மாவட்டத்தில் இளம் மேயராக பதவியேற்று கடந்த 50 வருடங்களாக இந் நாட்டில் உள்ள முவீன மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றேன். கடந்த காலங்களில் முவீன மக்களும் இணைந்து தனக்கு வாக்களித்தனால் கொழும்பு மாவட்டத்தில் முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றவனாக வந்துள்ளேன். சுகாதார,போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் சுற்றாடல் அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுக்களை பாரமெடுத்து தன்னால் முடியுமான அளவுக்கு தனது சமுகத்திற்கும் நாட்டுக்கும் சேவையாற்றியுள்ளேன்.  

கடந்த யுத்த காலத்தின் போது பயங்கரவாதிகளின் தனக்கு வைத்த 3 குண்டுதாக்குதலில்  தப்பி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளேன். நான் மக்களுக்கு நல்லதையே செய்கின்றேன். அதற்காகவே இறைவன் என்னை இத்தாக்குதலில் இருந்து பாதுகாத்துள்ளான்  எனவும் தெரிவித்தார். 

மேலும் இந்நிகழ்வில்  5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியெய்திய மாணவிகளை பாராட்டி சான்றிதழும் பதக்கமும் அணிவிக்கப்பட்டது. பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிர் கல்லூரியின் அதிபர் கலாநிதி ஹாஜான் மன்சூர் தலைமையில் நடைபெற்றது.






No comments

Powered by Blogger.