யாழ்ப்பாணத்தில் சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று யாழ் குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அரியாலை கிழக்கு, நாவலடி மற்றும் அச்சுவேளி தந்தை செல்வா கிராமம் ஆகிய பகுதிகளுக்கு அவர் விஜயம் மேற்கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார வசதியற்ற பகுதிகளுக்கு சூரிய சக்தி மூலம் மினசாரத்தை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அவர் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கும் உறுதியளித்துள்ளார்.

பென்சன் போன காலத்திலையும் ,வீட்ட சும்மா இருக்க ஏலாது எண்டு முசுப்பாத்தியா ஜப்னாவுக்கு டூர் போயிருக்குறாவாக்கும்.
ReplyDelete