விவாகரத்து பெறாது இரண்டாவது திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணுக்கு சிறைத்தண்டன
எம்.ஹபீஸ்
முதல் திருமணத்திலிருந்து விவாக ரத்துப் பெற்றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு மருவிவாகம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கொம்பணித் தெருவைச் சேர்ந்த பாத்திமா ரஸ்டின் என்ற 19 வயதுப் பெண்ணே இவ்வாறு இரண்டாம் விவவாகமொன்றைச் செய்திருந்தார். இது தொடாபாக முதற கணவரின் தாயார்(மாமியார்) செய்த முறைப்பாட்டை விசாரணை செய்த கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்ன 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த 6 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.

Post a Comment