Header Ads



மகாவலி கங்கையில் மூழ்கி முஸ்லிம் இளைஞர் வபாத்


AD

மகாவலி கங்கையில் நீராடிய அக்குறனை குருகொடை பகுதியைச்
சேர்ந்த 23 வயதுடைய எம்.எம்.எம்.ரியாஸ் என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கட்கஸ்தோட்டை கொஹாகொடை பிரதேசத்தில் மகாவலி கங்கையில் நேற்று திங்கட்கிழமை மாலை நண்பர்களுடன் நீராடியபோதே இந்த இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார்.

இவரை ஏனைய நண்பர்களால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். இவரின் மரணம் தொடர்பான் விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.