நாட்டில் புயல் காற்று - மட்டக்களப்பில் மேடை சரிந்தது - அமைச்சர்கள் தப்பினர் (படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் பலத்த காற்றுவீசியது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய சுகாதாரப் பிரிவுக்கான அடிக்கல்நாட்டும் வைபவத்தில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பிதிஸாநாயக்க உரையாற்றிக்கொண்டிருந்தபோது கடும் காற்று வீசத் தொடங்கியதால் அமைச்சர் உடனடியாக மேடையிலிருந்து பாதுகாப்பாக கீழிறக்கப்பட்டார்.
அதன்பின் அதிதிகள் மற்றும் பிரமுகர்கள் மேடையிலிருந்து இறங்கும்போது மேடையும் சரிந்து விழுந்தது. எனினும் இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதேவேளை கொழும்பில் இன்று காலை வீசிய டோர்னாடோ சுழற்காற்றின் காரணமாக பம்பலப்பிட்டி சகார வீதியிலுள்ள பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகள் சிலவற்றை படங்களில் காணலாம்.







Post a Comment