Header Ads



ரஷ்யாவில் இஸ்லாமிய அறிஞர் சுட்டுக்கொலை - மற்றுமொரு முப்தி படுகாயம்

ரஷ்யாவில் தாதர்ஸ்தான் மாகாணத்தில் பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் வலியுல்லாஹ் யகுபோவ் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இவர் தாதர்ஸ்தான் மாகாணத்தில் துணை முப்தியாகவும் (மார்க்க தீர்ப்பு வழங்குபவர்) இருந்து வருகிறார்.

முதன்மை முப்தி இல்தஸ் பைஸோவிற்கு குண்டுவெடிப்பில் காயமேற்பட்டது. யார் தாக்குதலை நடத்தினார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் கூறுகையில், ‘குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவைச் சார்ந்த மூத்த முஸ்லிம் பிரதிநிதி ரூஷன் அப்யாஸவ் கூறுகையில், ‘கொலைச் செய்யப்பட்ட மார்க்க அறிஞர் அனைத்துவித தீவிர கருத்துக்களைக் கொண்ட இயக்கங்களை எதிர்த்து வந்தார்’ என குறிப்பிட்டார்.

1 comment:

  1. ரஷ்யாவில் இஸ்லாம் வாழக் கூடாது என்பதே அரசின் திட்டம்.

    சிரியாவில் ஷீயா ஆட்சிக்கு பூரண ஆதரவு வழங்கி முஸ்லிம்கள்
    கொள்ளப் படுவதை ஊக்குவிப்பதும் இதே ரஷ்யாதான்.

    ReplyDelete

Powered by Blogger.