Header Ads



அரபு நாடுகளிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர் கறுப்புப் பட்டியலிடப்படுவர்


மத்திய கிழக்கில் குற்றங்கள் செய்தமைக்காரணமாக நாடுகடத்தப்படும் இலங்கையர்களை கறுப்புப்பட்டியலிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

வீசா முடிவடைந்த நிலையில் அதிக காலம் தங்கியிருத்தல், மற்றும் கொள்ளைகள் தொடர்பில் பல இலங்கையர்கள் மத்திய கிழக்கில் இருந்து நாடுகடத்தப்படுகின்றனர். இந்தநிலையில் அவர்களை கறுப்புப்பட்டியலிடுவதன் மூலம், மீண்டும் அவர்கள் மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள தடை ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 

No comments

Powered by Blogger.