கிண்ணியா ஜாயா வித்தியால அடிக்கல் நாட்டும் நிகழ்வு (படங்கள்)
கிண்ணியா திஃ ரீ.பி.ஜாயா வித்தியாலம் பாடசாலையை புதிய இடத்திற்கு இடமாற்றுவதற்கான முதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை காலை கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸினால் வைபவ ரீதியாhக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் தவிசாளரின் கோரிக்கைக்கிணங்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மூன்று மாடிக் கட்டிடத்திற்கான முதற் கட்ட நிதியாக 43 இலட்சம் ரூபா நிதியினை இதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
குpண்;ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலய அதிபர் எம்.எம்.முஸம்மில் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், கொரவ விருந்தினராகவும், விசேட விருந்தினராக கிண்ணியா வலய கல்வி அலுவலக பொறியியலாளர் எந்திரி.ரி.சாவானந்தன், மற்றும் கிண்ணியா வலய அதிபர்கள், ஆசிரியர்கள் , ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.பரீட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment