Header Ads



'காலமாம் வனம்' சிறுகதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு (படங்கள்)

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்

வசந்தி தயாபரனின் 'காலமாம் வனம்' சிறுகதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு வெள்ளவத்தை கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று(10) மாலை நடைபெற்றது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தலைமையில் சிறுகதை தொகுதி வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் கலாநிதி செல்வி திருச்சந்திரனிடமிருந்து பெறுவதை படத்தில் காணலாம்.

மு.தயாபரன், டொக்டர் எம்.கே.முருகானந்தன், பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா உட்பட பல பிரமுகர்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும் நூலசிரியர் வசந்தி தயாபரன் உரையாற்றுவதையும் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.





 

No comments

Powered by Blogger.