Header Ads



வடகிழக்கில் வேலைவாயற்ற பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் பட்டதாரி பயிலுனர்களாக சேர்ப்பு

அப்துல் ரஹ்மான் பரீத்

வடகிழக்கில் வேலைவாய்ப்பில்லாத பட்டதாரிகளுக்கு இம்மாத இறுதிக்குள் பயிலுனர் பட்டதாரி திட்டத்தின் கீழ் பயிலுனர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.
இலங்கை சுதந்திர பட்டதாரி சங்கம், நிதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

சகல வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கும் இதன் மூலம் தீர்வு காணப்படும். பட்டதாரி பயிலுனர்கள் திட்டத்தின் கீழ் இவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

இலங்கை சுதந்திர சேவை பட்டதாரிகள் சங்கத்தின் சேவை சட்ட வரையறைகளை ஆய்வு செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த தீர்மானமானது தமது சங்கம் பெற்ற பெரு வெற்றியாகும். இந்த வெற்றியின் பங்காளிகலாகும் வடக்கு கிழக்கு சுதந்திர பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களுக்கும் சங்கம் வாழ்த்து தெரிவிப்பதாக சங்கத்தின் பிரதம செயலாளர் மனுல சமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.