Header Ads



தம்புள்ள புனி பூமியிலிருந்து வெளியேறுங்கள் - முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் கடிதம்

தம்புள்ளை புனித பூமியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தி தம்புள்ளை நகர முஸ்லிம்களுக்கு தபால் மூலம் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பக்கங்களைக் கொண்ட இக்கடிதத்தில், அனுப்புபவர் பெயர் குறிப்பிடப்படப்படவில்லை. 'சிங்கள, பௌத்த நாட்டுப்பற்றாளர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை ஆவேசமூட்டும் வகையிலும் அவர்களது சகவாழ்வை விமர்சித்தும் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தம்புள்ளை பிரதேச அரசியல்வாதியான காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாரவின் பெயரும் சேர்க்கப்பட்டு அவர் முஸ்லிம்களுக்கு பௌத்த தனித்துவத்தை காட்டிக் கொடுத்துள்ளதாகவும் இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   வீரகேசரி

3 comments:

  1. எவ்வளவு கூடி விரைவில் மகிந்தர் நல்ல முடிவை எடுக்கிராரோ
    அவ்வளவிற்கு நாட்டு மக்களுக்கு நல்லது
    அபு

    ReplyDelete
  2. பெயர் குறிபிடபடாவிட்டால் அவன் யோக்கியன் அல்ல அவனின் கதையா விடுங்கள்.

    ReplyDelete
  3. 2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.