Header Ads



நிலா தேய்கிறதாம்...!



சந்திரன் வளர்ந்து தேய்கிறது என்று நாசா விஞ்ஞானிகள் தகவலளித்துள்ளனர். சந்திரன் ஒரு இயற்கையான செயற்கைகோள் என்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தில் உள்ள எல்.ஆர்.ஓ. என்ற கேமரா துல்லியமாக படம் பிடித்து அடையாளம் காட்டியுள்ளது.

முன்னதாக அப்பல்லோ- 15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் செங்குத்தான பாறைகள் மற்றம் நிலப்பரப்பு உள்ளது தெரிய வந்தது. அவை 10 மீட்டர் உயரமும், பல கிலோ மீட்டர் நீளமும் கொண்டவையாக உள்ளன என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில, சந்திரன் மிகவும் குளிர்ச்சியானது. அவற்றின் பாறைகள் சுருங்கி விரிவடையும் தன்மை உடையது இதுபோன்ற பல தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, சந்திரன் வளர்ந்து மீண்டும் தேயக்கூடிய தன்மை வாய்ந்தது. எனவே, இது ஒரு செயல்படக்கூடிய கிரகம் தான் என நாசா விண்வெளி மையத்தின் சந்திரன் ஆய்வு குழு தெரிவித்தது. சந்திரன் பல அதிசயங்களை தன்னுள் அடக்கி வைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.