பூகொடையில் தங்கம்..?
பூகொடை இறங்குதுறைக்கு அருகில் தங்க துகள் காணப்படுகின்றதா, என்பது குறித்து புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.
இறங்குதுறையில் மணலை அரித்து மக்கள் தங்கம் போன்ற ஒருவகை துகளை சேகரித்து வருகின்றமைக்கான தகவல்கள் பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர், கலாநிதி என்.பீ.விஜயானந்த குறிப்பிட்டார்.
அது தங்கத்துகளாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்த ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்றாக மறைவானவற்றை வெளிப்படுத்துவேன் என்ற கூற்றின் ஒன்றோ இது.
ReplyDelete