மட்டக்களப்பில் மற்றுமொரு சிலையை விஷமிகள் சேதப்படுத்தினர்
மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக நிறுவப்பட்டுள்ள அருட் தந்தை வில்லியம் ஓல்டின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த கை மற்றும் கையிலிருந்த விளக்கு ஆகியன இன்று புதன்கிழமை (23.5.2012) சேதப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளேன் என அருட் தந்தை எஸ்.எஸ்.டெரன்ஸ் தெரிவித்தார்.
1816ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த ஐரோப்பிய நாட்டவரான அருட் தந்தை ரெவரட் வில்லியம் ஓல்ட் மட்டக்களப்பு மெதடிஸ்த் மத்திய கல்லூரியை உருவாக்கியதுடன் அருட் பணிகளில் ஈடுபட்டு வந்தவர். இவரின் நினைவாக 2001ஆம் ஆண்டு மட்டக்களப்பு பொது நூலகத்திற்கு முன்பாக உருவச்சிலை நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment