Header Ads



யாழ்ப்பாணத்தில் நான்கரை அடி நீளமான முதலை பிடிபட்டது

யாழ்ப்பாணம் - செம்மணி வீதியில் அமைந்துள்ள வயற்பிரதேசத்தில் நேற்றைய தினம் முதலையொன்று அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கரை அடி நீளமான இந்த முதலை பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றின் ஊடாக விவசாய நிலத்தில் பிரவேசித்த போது பிடிக்கப்பட்டுள்ளது.

பிரேதேச மக்கள் முதலையைப் பிடித்து மற்றுமொரு இடத்தில் கட்டி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை முதலை எவரிடமும் கையளிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.