Header Ads



ஜெருசலத்தை மீட்க அரபு இராணுவம் அவசியம் - ஹமாஸிடம் வேண்டுகோள்


இஸ்லாமியர்களின் முதல் கிப்லாவை உள்ளடக்கிய புனித நகரமான ஜெருசலத்தை மீட்பதற்கு உடனடியாக அரபு ராணுவத்தை அமைக்குமறு ஃபலஸ்தீன பிரதமர் இஸ்மாயில் ஹனியாவிற்கு ஹமாஸின் அகதிகள் நிர்வாகத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸின் அகதிகள் நிர்வாகத்துறையின் பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தற்பொழுது நிலவி வரும் அரபு வசந்தத்தின் மூலம் அல் குத்ஸ் என்ற பெயரில் ஒரு அரபு ராணுவத்தை அமைப்பது என்பது இலகுவாகும்.

இதில் முதற்கட்டமாக பல்வேறு நாடுகளில் வசித்து வரும் ஃபலஸ்தீன அகதிகளை இணைக்குமாறும் பின்பு அரபு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்குமாறும் மேலும் அரபு ராணுவ அதிகார மையங்களை அமைத்து ராணுவத்தை நிர்வகிக்கலாம்’ என்றும் கூறியுள்ளனர்.

மேலும் ‘இது போன்ற ராணுவ அமைப்பின் மூலம் ஜெருசலம் மற்றும் மீதமுள்ள  ஃபலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு குறையும் என்றும் ஜெருசலத்தை மீட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை மீட்பு நடவடிக்கையின் போது இறைவன் தங்களுக்கு துணை இருப்பான்’ என்றும் கூறியுள்ளனர்.

எப்படியோ புனித பூமியில் இருந்து சியோனிச வாதிகள் அகற்றப்பட்டு அங்கே அப்பாவி ஃபலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி ஆர்வலர்களின் விருப்பம்.

No comments

Powered by Blogger.