மகாபொல புலமைப் பரிசில் 300 ரூபாவால் அதிகரிப்பு
மகாபொல புலமைப் பரிசில் பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் தொகையினை 300 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கூட்டுறவு உள்நாட்டு வர்த்தக அமைச்சு கூறியது. தற்பொழுது 10 ஆயிரம் பேருக்கு மகாபொல புலமைப் பரிசில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையை 10300 ஆக உயர்த்தியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாந்து தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இம்முறை 222 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 10300 பேருக்கு மேலதிகமாக மேலும் 40 ஆயிரம் பேருக்கு மகாபொல உயர் கல்வி புலமைப் பரிசில் வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Post a Comment