Header Ads



ஆயுர்வேத வைத்தியர் ஆங்கில மருந்துகொடுத்து 14 வயது மாணவி பரிதாப சாவு

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார். ஆயுள்வேத வைத்தியர் ஒருவர் வழங்கிய தவறான ஆங்கில மருந்துகள் காரணமாகவே சாவு சம்பவித்ததாக மாணவியின் உடற்கூற்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தூர் கிழக்கைச் சேர்ந்த உருத்திரன் சுதர்சிகா (வயது 14) என்ற மாணவி காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அருகில் இருந்த ஆயுள்வேத மருத்துவரிடம் பெற்றோர் இவருக்கு வைத்தியம் செய்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மாணவியின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இறப்பு விசாரணைகளை நீதிபதி ஏ.ஏ.ஆந்தராஜா மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தைப் பெற்றோரிடம் ஒப்படைக்க அவர் உத்தரவிட்டார்.

சரியான மருத்துவ சோதனைகள் இன்றி, எழுந்தமானமாக ஆங்கில மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணத்தாலேயே சுதர்சிகா உயிரிழந்தார் என்று அவரது உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments

Powered by Blogger.