Header Ads



ஹசாரேக்கு எதிர்ப்பு வலுக்கிறது - முக்கிய முஸ்லிம் பிரமுகர்கள் விலகுகின்றனர்

 ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயும் அவரது குழுவினரும் இணைந்து ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

இந்நிலையில், ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.வி.ராஜகோபால், ராஜீந்தர் சிங் ஆகிய 2 உறுப்பினர்கள் நேற்று விலகினார்கள்.

 இவர்களை தொடர்ந்து, ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை உருவாக்கிய 20 பேரில் ஒருவரான டெல்லி கத்தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான்செஸ்சாவ் அதிருப்தியில் இருப்பதால் அந்த குழுவில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

 அவருடன் மெகமூத் மதானி, சையத் ரிஸ்வி, சையத் ஷா பஸ்லுர் ரகுமான் வாய்சி ஆகியோரும் விலக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. 

No comments

Powered by Blogger.