பறிபோன முஸ்லிம்கள் காணிகள் - அரசு இதயசுத்தியுடன் செயற்படவேண்டும்
வடக்கு, கிழக்கில் பறிபோயுள்ள முஸ்லிம்களின் காணிகள் மீளகையளிக்கப்படுவதுடன, சிறுபான்மையினரின் காணி அபகரிப்புகளை நிறுத்துமாறு சம்பந்தப்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறபிக்கப்பட வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
முஸ்லிம்களிக் காணிகள் பறிபோயுள்ளமை தொடர்பில் நாம் சில பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். எனினும் முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. இன்று வடகிழக்கு சிறுபான்மை சமூகங்களக்குளு; உடுருவல்கள் நடைபெறுகின்றன. வன இலாகா, சுற்றாடல் மற்றும் பல அபிவிருத்தி பெயர்களில் இவைகள் மறைமுகமாக நடைபெறுகின்றன. அரசாங்கம் இதுவிடயத்தில் இதய சுத்தியுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
வடக்கு, கிழக்கில் பறிபோயுள்ள முஸ்லிம்களின் காணிகள் மீளகையளிக்கப்படுவதுடன, சிறுபான்மையினரின் காணி அபகரிப்புகளை நிறுத்துமாறு சம்பந்தப்பட அமைச்ர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறபிக்கப்பட வேண்டும் என்றார.
Post a Comment