Header Ads



இலங்கையில் முதல் முதலாக யானைகள் தொகை கணக்கெடுப்பு

கிராமத்தினருக்கும் யானைக்கும் இடையில் ஏற்படும் இன்னல்கள் காரணமாகவும், நாட்டில் யானைகளின் தொகை குறைவடைந்து கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த கணக்கெடுப்பானது ஆகஸ்ட மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் சந்திரவன்ச பதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், காலநிலை சீராக உள்ளமையால் கணக்கெடுப்பானது 48 மணி நேரத்தினுள் நிநைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மாதம் கணக்கெடுப்பாளர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும், கணக்கெடுப்பின் போது பலர் உதவ முன்வருவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.