Header Ads



யாழ்ப்பாணத்தில் மீலாத் விழா பெருமளவு முஸ்லிம்கள் பங்கேற்பு

யாழ்பாணத்தில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீலாத் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இம்முறை நடைபெற்ற மீலாதுன் நபி விழா  20 வருடங்களுக்கு முந்திய யாழ்ப்பாணத்தை பார்ப்பது போன்ற உணர்வை பலருக்கு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

 வீதிகளில் ஒலிரப்பு கருவிகள் கட்டப்பட்டு இஸ்லாமிய பயான்கள், கசீதா மற்றும் இஸ்லாமிய கீதங்களும் ஒலிபரப்பப்பட்டுள்ளதுடன், முஸ்லிம்களின் பகுதிகளில் பரவலாக பச்சைவர்ண கொடிகளும் கட்டப்பட்டுள்ளன.

சில பள்ளிவாசல்களில் சிறப்பு மௌலூது வைபவங்களும் நடைபெற்று, யாழ் முஸ்லிம்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் பொருட்டு மாற்று சமயத்தவர்களுக்கும் விருந்துபசாரம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் யாழ் முஸ்லிம் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் பாரிய விருந்து உபசாரம் இடம்பெற்றதுடன் வீடுகளுக்கும் விசேட உணவு வினியோகிக்கபட்டுள்ளது.



No comments

Powered by Blogger.