தண்ணீரில் இயங்கும் கார், இலங்கை இளைஞன் சாதனை
தண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார் இலங்கை வாலிபர் ஒருவர். இவரின் பெயர் துஷார எதிரிசிங்க.
இவர் சோதனை முயற்சியாக மூன்று லீற்றர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 கிலோ மீற்றர் தூரம் பயணித்து உள்ளார். தண்ணீரில் இயங்கக் கூடிய இக்காரின் முக்கிய விசயம் சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புகையை கக்காது.
ஏராளமான வெளிநாடுகள் இவரின் தொழிநுட்பத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளன. ஆனால் தாய் நாட்டுக்குத்தான் இத்தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார்.
ஆயினும் இவருக்கு தாய் நாட்டில் உதவி செய்ய எவரும் முன் வரவில்லை என்பது மன வருத்தத்துக்கு உரிய விடயம்.
Post a Comment