Header Ads



குடிசையில் வாழ்பவர்கள் குடிசையிலேதான் இருக்க வேண்டுமா?

குடிசையில் வாழ்பவர்கள் தொடர்ந்தும் குடிசையில்தான் வாழ வேண்டுமா என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பத்து லட்சம் வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு கிருளபனையில் இன்று அடிக்கல் நாட்டிவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

தோட்டம், குடிசை கொட்டில் என்பவற்றில் வாழ்பவர்கள் என்னாலும் வறுமையிலேயே வாழ்வதா? நீர் நிரம்பும்போது நீரில் மூழ்குகின்றனர்.

நோய் பரவும்போது மாகாணத்திற்கே நோய் பரவுகிறது. வாழ்நாள் முழுவதும் அவர்கள் இவ்வாறுதான் இருப்பதா? இந்த சமூகத்தில்தான் அவர்கள் குழந்தைகளைப் பெற வேண்டுமா?

அப்படியின்றேல் அந்த மக்களுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுப்பதா? குடிசையில் இருந்து வெளியில் எடுத்து நல்ல வேலைத் திட்டத்திற்குச் சென்று நல்ல வீடு அமைத்துக் கொடுத்து, அதனைதான் அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டுமென கேள்வி எழுகிறது. என்றார் ஜனாதிபதி.

No comments

Powered by Blogger.