Header Ads



ஓமானுக்கான இலங்கைத் தூதரகத்தின் “தூதுவருடன் பேசுங்கள்” சமூக தொடர்பாடல் நிகழ்ச்சி இம்மாதம் ஆரம்பமாகிறது


 ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் “தூதுவருடன் பேசுங்கள்” என்ற சமூக தொடர்பாடல் நிகழ்வொன்றை ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக்கிழமை 9.00 மணி தொடக்கம் 2.00 மணிவரை நடாத்தவுள்ளது. இந்த நிகழ்வின் நோக்கம் ஓமானில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைப் பிரஜைகள் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் தொலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை கலந்தாலோசிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகும்.

பின்வரும் கட்டணம் செலுத்தப்படாத தொலைபேசி எண்ணை அழைத்து ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அவர்களுடன் ஒவ்வொரு மாதத்தின் இறுதி வியாழக் கிழமைகளில் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்:

80007877

“தூதுவருடன் பேசுங்கள்” முதலாவது நிகழ்வு இம்மாதம் எதிர்வரும் 25ம் திகதி 9.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறும் என்பதை இத்தால் அறியத் தருகிறோம்.

இலங்கைத் தூதரகம்

மஸ்கட்

01.11.2021 மனாஸ் ஹுசைன்

No comments

Powered by Blogger.