Header Ads



பெற்றிக்கலோ கம்பஸ்சில் பெறுமதி வாய்ந்த கணினிகளையும், இலத்திரனியல் உதிரிப்பாகங்களையும் களவாடியமை 2 பேர் கைது


- நடராசா கிருஸ்ணகுமார் -

மட்டக்களப்பு புணானையில் அமைந்துள்ள 'பெற்றிக்கலோ கம்பஸ்சில் 'பெறுமதி வாய்ந்த கணினிகளையும், இலத்திரனியல் உதிரிப்பாகங்களையும் களவாடியமை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று -29-  மாலை பெற்றிக்கலோ கம்பஸிற்க்கு உள்ளே இருந்து வந்த வானினை பொலிஸார்  சோதனையிட்டபோதே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்கள் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மேலும் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாகச்  செயற்படுத்தப்பட்டு  வரும் இங்கு,  கடமையாற்றும் உத்தியோகஸ்த்தர்களே இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.