ஒரு நாள் ஸ்டிக்கர், இன்றுமுதல் ஆரம்பம்
கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையானது கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, வத்தளை, கல்கிஸை ஆகிய பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு வாகனத்தை பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment